பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி: குஷியில் நடுத்தர மக்கள்...



இந்தியாவில் உள்ள சிறு,குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெற்று தரும் வசதியை தொடங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன்களை பெற்று தரும் திட்டத்தினை இந்தியாவில் (India) தான் முதன்முதலில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது. மாநகரங்கள், நகரங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடனுதவி கிடைக்கும்.

இதனை சிறு தொழில் கடன் நிறுவனமான “இண்டிஃபையுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் இண்டிஃபை நிறுவனத்தின் கடன் திட்டங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும். இதன் மூலம் தொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறலாம்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் அஜீத் மோகன் செய்தியாளர்க்களுக்கு காணொலி மூலமாக அளித்த பேட்டியில், ” ஃபேஸ்புக் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் எளிதாக கடன் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம்.எங்களுடன் இண்டிஃபை நிறுவனமும் இத்திட்டத்தின் வாயிலாக இணைந்துள்ளது.

இதற்கடுத்த கட்டமாக மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தினை தொடங்குவதன் மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த ஒரு வருவாயும் கிடைக்கப்போவதில்லை. ஃபேஸ்புக்கினை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு கட்டணம் ஏதும் நிறுவனம் வசூலிக்காது.

இந்த திட்டம் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோரையும் , ஃபேஸ்புக் நிறுவனத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இது இருக்கும்” என்று தெரிவித்தார். 

Related Posts:

  • ட்ரூகாலரில் செடியூல் எஸ்.எம்.எஸ் செய்வது எப்படி? தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை இனங்கண்டு அழைப்பவரின் பெயரை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் ட்ரூகாலர் ஆப் பற்றி நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.ஆரம்பத்தில் ட்ரூகாலர் தனியாகவும் ட்… Read More
  • கூகுள் குரோம் பிரௌசரில் மறைந்துள்ள புதிய வசதி! (Sneak Peek) இன்று இன்டர்நெட் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.அதிலும் மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களே இன்று அதிகம். அவ்வாறு இணையத்தை பயன்படுத்துபவர்களில் ஆண்ட்ராய்டு போன் மூலம் குரோம் இணைய உலாவியை பயன்ப… Read More
  • டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான். கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்கள… Read More
  • யூடியூப்-ஆப் இல் வழங்கப்பட்டுள்ள அருமையான ஒரு புதிய வசதி! கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் இணையத்தளம் உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.அத்துடன் ஒவ்வொரு நாளும் இதில் சுமார் ஒரு பில்லியன் மணித்தியாலங்களுக்கு சமனான வீடியோ கோப்… Read More
  • கூகுள் ஆப் இல் மறைந்துள்ள மற்றுமொரு புதிய வசதிஐபோன்-களில் வழங்கப்பட்டுள்ள “சிறி” வசதியை போன்று ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.இவற்றின் மூலம் ஏராளமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.தற்பொழுது தமிழ… Read More

0 comments:

கருத்துரையிடுக