WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

WELCOME TO PURE TAMIL TECH

Root of ICT education.

Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

WhatsApp-ல் யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு கேஷ்பேக் வழங்க திட்டம்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்த கேஷ்பேக் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் UPI பேமெண்ட்களை பொறுத்தவரை ஏற்கனவே Google Pay, PhonePe, Paytm போன்ற நன்கு அறியப்பட்ட ஆப்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், தானும் இந்த பட்டியலில் சேர வாட்ஸ்அப் நிறுவனம் தனது UPI பேமெண்ட்ஸ் அம்சத்தை பயனர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றும் உலகம் முழுவதும் பிரபல மெசேஜிங் App-ஆக இருந்து வரும் வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் அம்சங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப் பேமண்ட்ஸ்.

இந்தியாவிலேயே கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை மெசேஜிங் காரணங்களுக்காக பயன்படுத்தினாலும் கூட, இதன் பேமெண்ட்ஸ் ஆப்ஷனை யாரும் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை மார்க்கெட்டிங் செய்ய, போட்டியாளரான கூகுளின் பேமெண்ட் சேவையான Google Pay-வை போலவே கேஷ்பேக் ஆஃபர்களை கொண்டு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo-ன் தகவலின் படி, வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் UPI பேமெண்ட்ஸ்களுக்கு, விரைவில் வாட்ஸ்அப் கேஷ்பேக் சலுகைகளை தர உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் இன்னும் டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது மற்றும் பீட்டா டெஸ்டர்ஸுக்கு இது சென்றடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பேமெண்ட்ஸ்களை அறிமுகப்படுத்தியது. எனினும் இந்த சேவை சில வருடங்கள் பீட்டா வெர்ஷனில் இருந்தது, அதே நேரத்தில் வாட்ஸ்அப் யுபிஐ சேவைகளை வழங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றது.


இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு, அனைத்து யூஸர்களுக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் கோடிக்கணக்கான இந்திய யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப்-பின் இந்த புதிய அம்சம் நாட்டில் பெரியளவில் இன்னும் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் அடுத்தடுத்து வரும் வாட்ஸ்அப் வெர்ஷன் அப்டேட்களின் போது இந்த சலுகை அம்சம் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் WABetaInfo தகவல் தெரிவித்து, வரவிருக்கும் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டயும் சோஷியல் மீடியா போஸ்ட்டில் சேர்த்துள்ளது. 





Smart Phoneல் வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி? பலரும் அறியாத சூப்பரான ட்ரிக்ஸ்

 

pure tamil tech news

இப்போது உள்ள தலைமுறைகளுக்கு பிடிக்காத விடயம் என்றால் ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிடுவது தான்.

ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஏற வேண்டும் என பலரும் விரும்புவார்கள்.

உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்ய சில எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்

சரியான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும்

ஸ்மார்ட்போன்களை எப்போதும் அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் கணினி இருக்கிறது என்பதற்காக கணினியில் யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். யுஎஸ்பி கொண்டு சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆக வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொள்ளும். ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய சாதாரண சார்ஜரை மட்டும் பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்யலாம்.

ஏர்பிளேன் மோட்

ஸ்மார்ட்போனினை எத்தனை நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும் அதனினை ஏர்பிளேன் மோடில் (Airplane Mode) வைத்து சார்ஜ் செய்தால் சீக்கிரம் சார்ஜ் செய்திட முடியும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது ஸ்மார்ட்போனில் இணையம், மற்றும் நெட்வொர்க் சிக்னல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை நிறுத்தி போனின் இயக்கத்தை குறைக்கும். இதனால் ஸ்மார்ட்போனில் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது உங்களுக்கு எவ்வித அழைப்பும், குறுந்தகவல்களும் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையற்ற அம்சங்களை நிறுத்தினால் சார்ஜ் வேகமாக ஏறும் 

ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, மொபைல் டேட்டா உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதும் சார்ஜ் சீக்கிரம் நிரப்பப்படும். ஸ்மார்ட்போனில் தேவையற்ற அம்சங்களை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் சார்ஜிங் வழக்கத்தை விட வேகமாக இருப்பதை காண முடியும்.

 

இன்ஸ்டா ட்விட்டரில் இருந்து வாட்ஸ் அப்க்கு வரும் சூப்பரான அம்சம்- எதிர்ப்பார்ப்பில் பயனாளர்கள்!

 

WhatsApp react option tamil news

வாட்ஸ் அப் நிறுவனமானது பயனாளர்கள் அடிக்கடி புது புது வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

இதனை வாட்ஸ் அப் அம்சங்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் குறுந்தகவல்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு குறுந்தகவல்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யலாம்.

இது பேஸ்புக் பதிவுகளுக்கு லைக் மற்றும் இதர எமோஜி மூலம் ரியாக்ட் செய்வதை போன்றே செயல்படும். இன்ஸ்டாகிராமில் ரியாக்ட் செய்ய, குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பாப்-அப் ஆகும் எமோஜியில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியிலும் புதிய அம்சம் இதேபோன்றே வழங்கப்படும் என தெரிகிறது. 

ஸ்மார்ட் போனை பராமரிப்பது எப்படி? போனில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இப்படி செய்தால் போதும்…

 

ஸ்மார்ட் போனை பலரும் உபயோகப்படுத்தினாலும் அதை அவர்கள் சரியாக பராமரிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!

சரி, ஸ்மார்ட் போன்களை பராமரிப்பது எப்படி என காண்போம்.

பேட்டரி & சார்ஜிங்

உங்கள் பேட்டரியை எப்பொழுதும் முழுவதுமாய் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள், எனவே அவசர நேரத்தில் நீங்கள் வாய்ஸ் காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப எந்த தடையும் இல்லாமல் இருக்க முடியும். மேலும், எப்போதும் உங்கள் மொபைல் போன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உண்மையான பேட்டரிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.

டச் லாக்

உங்கள் போனின் டச் லாக் மற்றும் கீப்பேட் லாக் சேவைகளை எப்பொழுது லாக் செய்து வைப்பது அவசியம். இதனால் உங்கள் போன், உங்கள் ஹேண்ட்பேக் அல்லது சட்டைப் பைகளில் இருக்கும் பொழுது நிகழும் தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் செயலிகள் டெலீட் ஆவது தடுக்கப்படும்.

ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது அவசியம்

உங்கள் போன்களை மென்மையான துணியால் அடிக்கடி சுத்தம் செய்யலாம். ஏனெனில் தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்களின் போன்களை பாதிக்கக்கூடும். தண்ணீர், கடுமையான சோப்பு திரவம், சால்வெண்ட் அல்லது கடுமையான இரசாயனங்கள் போன்ற திரவங்களை போனில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அப்படி திரவங்கள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் பட்டுவிட்டால் உங்கள் போன் சேதமடையக் கூடும், அதனால் உங்கள் போன்களை சில நேரங்களில் உலர வைப்பது அவசியம்.

மொபைல் போன் கவர்

தேவை இல்லாத கீறல்கள், தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து உங்கள் போனை பாதுகாத்துக்கொள்ள நல்ல உறுதியான மொபைல் கவர்களை பயணப்படுத்துங்கள். உங்கள் போனை கையிலிருந்து நழுவவிடுவது அல்லது தேவையில்லாமல் வேகமாக அசைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும்.

 

 

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டதா? இதனை எப்படி அன்லாக் செய்வது?

பொதுவாக உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும்.

ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும் . குறிப்பாக மொபைலில் உள்ள எஸ்எம்எஸ், மற்றவர்களின் தொடர்பு எண்கள், ஆப்ஸ், போன்ற அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

forget password pure tamil yech news in tamil

அந்தவகையில் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 

  • உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால், முதலில் மொபைலை ரீசெட் செய்த பின்பு, பவர் ஆஃப் செய்ய வேண்டும்.

  • அடுத்து உங்கள் மொபைலின் VOLUME BUTTON, பவர் பட்டன், ஹோம் பட்டன் போன்றவற்றை ஒன்றாக அழுத்த வேண்டும்.

  • அதன்பிறகு மொபைலில் ஆண்ட்ராய்டு லோகோ காணப்படும், பின்பு பல்வேறு பட்டியல் உங்கள் மொபைலில் இடம்பெறும்.

  • அதன்பின்பு கொடுக்கப்பட்ட பட்டியலில் wipe cache partition-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  • அடுத்து wipe data/factory reset-எனும் விருப்பத்தையும் கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஆம் அனைத்து பயனர் தரவு நீக்கு (yes-delete all user data) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

  • கடைசியாக reboot system now-என்ற விருப்பத்தை கிளிக் செய்தால், உங்கள் மொபைலை பழையபடி உபயோகம் செய்யமுடியும். 

PDF கோப்புக்களை எவ்வாறு ஒன்றாக இணைப்பது?



பல்வேறு தேவைகளுக்காக நாம் இன்று ஸ்மார்ட்பேசிகளிலும், கணனிகளிலும் PDF கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.

இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புக்களை ஒரே கோப்பாக இணைக்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும் எது எளிமையான முறை என்பதனை பார்க்கப்போகின்றோம்.

PDF மென்பொருளை அறிமுகம் செய்த அடோப் நிறுவனமே இந்தற்கான தீர்வினை வழங்குகின்றது.

ஆன்லைனிலேயே மிகவும் எளிதாக பீ.டி.எப் கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.

Adobe's free online tool to combine PDFs என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் மிகவும் சுலபமாக பல கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.

உதாரணமாக PDF வடிவில் உங்களிடம் காணப்படும் ஒரு தொகுதி படங்கள் அல்லது ஆவணங்களை ஒன்றிணைந்து ஓரு கோப்பாக உருவாக்க வேண்டுமாயின் இந்த லிங்கை அழுத்தி இலகுவில் உங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Select Files ஐ அழுத்தி தேவையான கோப்புக்களை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

தேவையான அனைத்து கோப்புக்களையும் அப்லோட் செய்ததன் பின்னர் Merge/Combine Files என்பதனை அழுத்தி இந்த கோப்புக்களை ஒன்றிணைக்க முடியும்.

இவ்வாறு ஒரே கோப்பாக (File) ஒன்றிணைப்பதுடன் அதன் பக்கங்களை ஒழுங்கமைக்கவும், திருத்தங்களை செய்யவும், JPEG மற்றும் Word போன்ற வேறு ஓர் கோப்பு வடிவத்தில் மீள கோப்பினை சேமிக்கவும் முடியும்.

ஆண்ட்ராய்டு போன்-களுக்கு சிறந்த VPN ஆப் எது?

 VPN ஆப் பற்றி இன்று அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது பல்வேறு நோக்ககங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

என்றாலும் பிரதானமாக குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அல்லது ஒரு நாட்டில் இணையத்தை பயன்படுத்தும் போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.

இந்த VPN சேவையை பெற்றுக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோரில் ஏராளமான செயலிகள் இருக்கின்றன.

இருந்தாலும் அவற்றில் ஏராளமான ஆப்-கள் முறையாக இயங்குவதில்லை. எனவே உங்களுக்கு சிறந்த ஒரு VPN ஆப் ஐ நாம் கீழே வழங்கியுள்ளோம். இதனை பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யவும் முடியும்.

vpn tamil news pure tamil tech

ஒரு சிறந்த VPN ஆப் ஐ பயன்படுத்துவதன் மூலம் உங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஆப், மற்றும் இணையதளங்கள் போன்றவற்றை எவ்வித தங்கு தடையும் இன்றி உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                                                        எமது சேனலில் இணைக

நான் மேலே குறிப்பிட்டது போன்று இலவசமாக கிடைக்கக்கூடிய ஏராளமான VPN சேவைகள் முறையாக இயங்குவதில்லை. இருப்பினும் டனல் பீர் எனும் ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் சிறப்பாக இயங்குகிறது.

இந்த ஆப்-இல் 23 நாடுகளுக்கான VPN-கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு விரும்பிய எந்த ஒரு நாட்டை தெரிவு செய்தும் பிரௌசிங் செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்பு, இணைய வேகம் போன்ற அம்சங்கள் இதில் சிறப்பாக காணப்படுகின்றன.

இதனை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கி இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு மாதாந்தம் 500 எம்.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

மேலும் இலவசமாக வழங்கப்படும் மாதாந்த டேட்டாவை கட்டணம் செலுத்தாமல் பல்வேறு வழிகளில் அதிகரித்துக் கொள்ளவும் வழிகள் இதில் தரப்பட்டுள்ளன.

பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவாகவும் உள்ளது. இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ், மேக் போன்ற பல்வேறு சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ஒருமுறை பயன்படுத்திதான் பாருங்களேன்.

டனல் பீர்


டாகுமெண்ட்-களை ஸ்கேன் செய்ய நம்பர் ஒன் ஆப் இது தான்.

 

tamil tech news

கோவிட் 19 கொள்ளை நோயால் இன்று அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி ஆசிரியர் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் தமது பாடங்கள், வினாத்தாள்களை வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தமது மாணவர்களுக்கு வழங்கி கற்பித்து வருகின்றனர்.அதே நேரம் மாணவர்களும் தமது விடை பத்திரங்களை போட்டோ பிடித்து இணையத்தின் ஊடாகவே அனுப்பி வைக்கின்றனர்.

அடோபி ஸ்கேன்: மிகச்சிறந்த ஒரு ஸ்கேனிங் ஆப்

நான் மேலே குறிப்பிட்டது போன்ற சந்தர்ப்பங்களில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களுக்கும் உதவுகிறது அடோபி ஸ்கேன் எனும் ஆப்.

ஸ்கேனர் இயந்திரத்திற்கு நிகரான ஸ்கேனிங் வசதி:

இது உங்கள் பாட புத்தகங்கள், பயிற்சி கொப்பிகள், வினாத்தாள்கள், விடை பத்திரங்கள் போன்ற எந்த ஒரு டாகுமெண்ட்-ஐயும் மிகத் தெளிவாக போட்டோ பிடிக்க உதவுகின்றது.

டாகுமெண்ட்-களை பி.டி.எப் வடிவில் சேமிக்கக் கூடிய வசதி:

இந்த ஆப் மூலம் நீங்கள் பிடிக்கக்கூடிய டாகுமெண்ட்-களை இது பி.டி.எப் வடிவத்தில் சேமித்துக் கொள்ளவும் உதவுகிறது. (படிப்பதற்கும் பிரிண்ட் அவுட் செய்வதற்கும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மிக பொருத்தமான வடிவம் பி.டி.எப் (PDF) ஆகும்)

பல பக்கங்களை கொண்ட ஒரு பி.டி.எப் (PDF) பைல்:

மேலும் பக்கம் பக்கமாக இருக்கக்கூடிய நீண்ட புத்தகங்கள், டாகுமெண்ட்-கள் போன்றவற்றையும் கூட மிகக் குறுகிய நேரத்தில் போட்டோ பிடித்து ஒரு பி.டி.எப் (PDF) பைல் ஆக பெற்றுக் கொள்வதற்கான வசதியை இது கொண்டுள்ளது.

தெளிவற்ற போட்டோ-க்களையும் தெளிவாக மாற்றலாம்:

அத்துடன் நீங்கள் ஏற்கனவே உங்கள் மொபைல் போன் கேமரா மூலம் பிடித்த மங்கலான போட்டோ-க்களை கூட இந்த ஆப் இன் உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்ட ஒரு டிஜிட்டல் ஆவணமாக மாற்றிக் கொள்ள முடியும்.

adobe scan tamil tech pure tamil tech

அடோபி ஸ்கேன்: பயன்படுத்துவது எப்படி?

  1. அடோபி ஸ்கேன் ஆப் ஐ திறக்க:

    இதனை ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் ஐபோன்-களுக்கு ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கேமரா மூலம் ஸ்கேன் செய்க:
  1. டாகுமெண்ட்-இற்கு முன்னாள் உங்கள் மொபைல் போனை நிலையாக வைத்து ஸ்கேன் செய்க.

  1. நான்கு மூலைகளையும் சரி செய்க.
ஸ்கேன் செய்யப்பட்ட டாகுமெண்ட்-இன் நான்கு முலைகளும்
அடோபி ஸ்கேன்ஆப் ஆல் கண்டறியப்பட்டு தெரிவு செய்யப்பட்டு
இருக்கும். இருப்பினும் அதில் குறைபாடுகள் இருந்தால் உங்களால்
அதனை சரி செய்துகொள்ள முடியும்.

  1. Adobe Scan, அடோபி ஸ்கேன்

படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அடுத்தடுத்த பக்கங்களை
ஸ்கேன் செய்க.
ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை கொண்ட டாகுமெண்ட் எனின்,
படிமுறை 2, மற்றும் 3 ஐ பின்பற்றி அனைத்து பக்கங்களையும் ஸ்கேன்
செய்து கொள்க.

Continue பட்டனை அழுத்துக.

ஸ்கேன் செய்து முடிந்தவுடன் Continue பட்டனை அழுத்துக.
பக்கங்களை சரிப்படுத்துக.

Continue பட்டனை அழுத்தியதை தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட
அனைத்து பக்கங்களும் தோன்றும். ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை
கொண்ட ஆவணம் எனின் அதன் பக்கங்களை ஒழுங்கு முறை
படுத்திக் கொள்க.

Save PDF பட்டனை அழுத்துங்க.
வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள Save PDF பட்டனை
அழுத்துவதன் மூலம் நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ பி.டி.எப்
(PDF) பைல் ஆக மாற்றிக் கொள்ள முடியும்.
  1. app to scan documents

இனி அதனை சேவ்/ஷேர் செய்ய முடியும்.

நீங்கள் ஸ்கேன் செய்த டாகுமெண்ட் ஐ உங்கள் போனில் சேமித்துக்
கொள்ளவோ அல்லது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சேவைகள் மூலம்
ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியும்.


Mobile scanning app
குறிப்பு:

இந்த ஆப் ஐ பயன்படுத்துவதற்கு உங்கள் மின்னஞ்சல் (E-mail)

முகவரியை பயன்படுத்தி அல்லது பேஸ்புக், கூகுள் கணக்கை

பயன்படுத்தி இலவச அடோபி அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி

உள்நுழைய வேண்டும்.

இறுதிக் கருத்து:

இந்த செயற்பாட்டை மேற்கொள்வதற்கு மைக்ரோசாப்ட் லென்ஸ், கெம் ஸ்கேனர் போன்ற இன்னும் பல செயலிகளும் உள்ளன.

இருப்பினும் எனது அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை விட இந்த

ஆப் பயன்படுத்துவதற்கு இலகுவானதாகவும் சிறந்த வசதிகளை

தரக்கூடியதாகவும் உள்ளது.

எனவே ஒரு ஸ்கேனர் இயந்திரத்தின் உதவியின்றி ஒரு ஆவணத்தை

அப்படியே ஸ்கேன் செய்தது போல் பெற்றுக்கொள்ள இந்த இலவச

ஆப் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.